Saturday, 2 March 2019

டி.என்.பி.எஸ்.சி., அரசுப் போட்டித் தேர்வு எழுதி ஒரேநேரத்தில் பணி நியமனம் பெற்ற தாய், மகள்!

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த தாயும் மகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஒரே நேரத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தேவதானப்பட்டி விவசாயி ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (48). பி.எஸ்.சி.,படித்துள்ளார். மகள் தேன்மொழி (27) எம்.ஏ. படித்துள்ளார். ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.  சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோர் தேனியில் திண்ணை அமைப்பின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தனர்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை  மாவட்டத்தின் சார்பாக 6 முதல் 14 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான  உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

 விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  இரா.வனஜா தலைமை வகித்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார்.விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்(பொ)     மு.மாரிமுத்து, உதவித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்      இரவிச்சந்திரன்  ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழநிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் சிதறும்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கிவிட்டது. மாணவர்கள், பயம், பதட்டம் இல்லாமல், ஆரோக்கியமான மனநிலையோடு தேர்வை எதிர்கொண்டால், மதிப்பெண்களை அள்ளலாம் என, கல்வியாளர்கள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை 348 பள்ளிகளில் இருந்து 35 ஆயிரத்து 723 மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். 116 மையங்களில் தேர்வு நடக்கிறது.

கே.வி., பள்ளி, அட்மிஷன் ஆன்லைன் பதிவு

கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு, இன்று முதல், &'ஆன்லைன்&' பதிவு துவங்குகிறது.
நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 14 பள்ளிகள் உட்பட, தமிழகத்தில் மட்டும், 48 கே.வி., பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, &'கே.வி.சங்கதன்&' என்ற, கேந்திரிய வித்யாலயா கமிஷனரகம் வழியே, ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற, கே.ஜி., வகுப்புகள் கிடையாது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here