Wednesday, 18 December 2019

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள்: பணிநீக்கம் செய்ய தமிழக அரசு முடிவு?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் ஆசிரியர்  தகுதித் தேர்வினை முடிக்க வேண்டும் என்பது விதியாகும்.
அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படுகிறார்கள்.

ஈரோடு: சத்தியமங்கலம் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் அற்புதமான கவிதை


மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020 – தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செய்திக்குறிப்பு வெளியீடு

March 2020 Exam - +2 Discontinued Students admission Regards instructions

March 2020 Exam - G.O. 217 Dated:06.12.2019 Communication - Old syllabus/ CBSE/ Other state students Exam admission

March 2020 Exam - HSE I Year - NR Correction/ Addition Date extension instructions

Private Candidate Instructions for HSE I year Mar 2020 / Private Candidate Instructions for HSE II year Mar 2020

Tuesday, 17 December 2019

பள்ளி வளாகங்களில் திருடுபோன இலவச லேப்டாப்கள் எத்தனை...? விபரமளிக்க பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவு

பள்ளி வளாகங்களில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை லேப்டாப்கள் திருடப்பட்டது என்பது குறித்து விவரங்களை அளிக்க தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் துறை, பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன
.

கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அவ்வாறு அனுப்பப்படும் லேப்டாப்கள், குறிப்பிட்ட மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் போது அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

கிருஷ்ணகிரி அருங்காட்சியக வெள்ளி விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர்


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட இரா.முருகன் அவர்களுடன் சந்திப்பு


Monday, 2 December 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.


இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுக்க கடந்த கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here