RMSA -3550 BT 710 JA and 710 Lab Assistants Post continuation order - click here to download
Wednesday, 28 April 2021
Tuesday, 27 April 2021
சேலம் பள்ளியில் விதிகளை மீறி பிளஸ்1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு: சிஇஓ கணேஷ்மூர்த்தி எச்சரிக்கை
கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, சேலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் வருமானம் இன்றி தவிப்பு: தினக்கூலியாக வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓரண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கல்வி கட்டண சலுகைகள்; தனியார் பள்ளிகள் தாராளம்!
கொரோனா தொற்றால் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, பல தனியார் பள்ளிகள் சலுகைகளை அறிவித்துள்ளன.கொரோனா தொற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், வழக்கம் போல, கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நம் நாட்டிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஓர் ஆண்டாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. அதனால், பள்ளிகளில் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதும், பள்ளி விட்டு பள்ளி மாறுவதும் அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பணி: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும், பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Monday, 26 April 2021
Friday, 23 April 2021
Tuesday, 20 April 2021
தினமும் பள்ளிக்கு சென்று மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் அரசு பள்ளி மாணவர்கள்
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரி வகுப்புகளும் படிப்படியாக தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளதால் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டுமே வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அரசு பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் " நிழல் இல்லா நாள் " அனுசரிக்கப்படுகிறது . அன்றைய தினத்தில் சூரியன் உச்சிக்கு வருகின்ற பொழுது பூமியின் மீது உருவங்களின் நிழல்கள் விழாது அதாவது பொருள்களின் கீழ் நிழல்கள் அடங்கிவிடும் . இந்த நாளை "நிழலில்லா நாள் " என்று அழைப்பர். இதே போல் மணப்பாறை வட்டத்தில் இந்த வருடம் ஏப்ரல் 17ஆம் நாளான நேற்றைய தினம் நிழல் இல்லாத நாள் அனுசரிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்புவகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டம்?
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.அதன்படி, தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.
Monday, 19 April 2021
பிளஸ்-2 செய்முறை தேர்வு:பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆய்வு
அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த செய்முறை தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2-வது நாளான நேற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள்
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர் களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை 57,659 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடு வழங்கப்படுகிறது. இதற்கான பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடுகள் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here