Wednesday, 10 May 2017

விமான படையில் ஆட்கள் சேர்ப்பு முகாம்

'திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், இந்திய விமான படையில் குரூப் ஒய் பிரிவுக்கான ஆட்கள் சேர்ப்பு முகாம், வரும், 20 மற்றும், 22 ல் நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் பங்கேற்று பயனடையலாம்' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், வரும், 20 மற்றும், 22ல், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை, இந்திய விமான படையில், குரூப் ஒய் பிரிவில் பணி புரிய, ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது. 1997 ஜூலை, ஏழு முதல், 2000 டிச., 20க்குள் பிறந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, திருமணம் ஆகாத இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். ஆட்கள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, உடல், கல்வி, தொழிற் கல்வி தகுதி மற்றும் உரிய நேரத்தில் ஆஜராவது குறித்த விபரங்களை, www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியிலும், 044-22390561, 044-22395553 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை, தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here