தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ஐடிஐ-க்களில் மாணவர்கள் சேர புதன்கிழமை (மே 10) முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் http://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன தகுதிகள்?தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (prospectus) தரப்பட்டுள்ளன.
மேற்கண்ட இணையதளத்தில் புதன்கிழமை (மே 10) முதல் விண்ணப்பம், விளக்கக் கையேடு ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிடலாம். இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை மாணவர்கள் கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணைய வசதி மையங்களிலிருந்தும், அரசு இ-சேவை மையங்களிலிருந்தும் சமர்ப்பிக்கலாம்.
மே 31 கடைசி: விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி மே 31 ஆகும்.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சி நிரலின்படி தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்புடைய மாவட்ட ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்று தேர்வு செய்யலாம். இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட அரசுத் தொழிற்பயிற்சி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
-தினமணி
இது குறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் http://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன தகுதிகள்?தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (prospectus) தரப்பட்டுள்ளன.
மேற்கண்ட இணையதளத்தில் புதன்கிழமை (மே 10) முதல் விண்ணப்பம், விளக்கக் கையேடு ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிடலாம். இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை மாணவர்கள் கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணைய வசதி மையங்களிலிருந்தும், அரசு இ-சேவை மையங்களிலிருந்தும் சமர்ப்பிக்கலாம்.
மே 31 கடைசி: விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி மே 31 ஆகும்.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சி நிரலின்படி தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்புடைய மாவட்ட ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்று தேர்வு செய்யலாம். இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட அரசுத் தொழிற்பயிற்சி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
-தினமணி
No comments:
Post a Comment