ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் இன்று மே-3 அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தம்பதா என்ற புதிய திட்டம் மூலம் வேளாண் துறையை நவீனமாக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 7-வது ஊதிய குழுவின் பரிந்துரை படி ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மற்றும் தேசிய எக்கு கொள்கைக்கு ஓப்புதல் அளிப்பது போன்றவற்றிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
-தினமலர் 03-05-2017
மேலும் விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மற்றும் தேசிய எக்கு கொள்கைக்கு ஓப்புதல் அளிப்பது போன்றவற்றிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
-தினமலர் 03-05-2017
No comments:
Post a Comment