Monday, 18 September 2017

பள்ளிகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் நவம்பரில் வெளியீடு

தமிழக பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.


இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உதயசந்திரனை நீக்கிவிட்டு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக பிரதீப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். அப்போது, நீதிபதி கிருபாகரன், மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசு விளையாடக் கூடாது என்றும் குறிப்பிட்ட அதிகாரியை மாற்றியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், உதயச்சந்திரனை பொறுப்பில் இருந்து நீக்கவில்லை எனவும், அவருக்கு மேலாக முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும், புதிய பாடத் திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், நவம்பரில், புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்படும் எனவும் கூறினார். இதையடுத்து உதயச்சந்திரன் நீக்கப்படவில்லை என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here