தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் நந்தகுமார் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கலைத்திருவிழாவில் பங்குகொண்டு தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்ற கிருத்திகா ,பிரஜித்,பாலமுருகன்ஆகியோருக்கு ம்,நாட்டுபுற நடனத்தில் குழுவாக வெற்றி பெற்ற சந்தோஷ்குமார்,ராஜேஸ்வரி,அம்மு ஸ்ரீ, தேவதர்ஷினி,திவ்யதர்ஷினி,ஆகாஷ், பாலமுருகன்,புகழேந்தி ஆகியோருக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியில் ஒரு நபர் நாடகம்,களிமண் பொம்மைகள் செய்தல் ,மறுவேடப்போட்டி,அழகு கையெழுத்து,தேசபக்தி பாடல்கள்,வரைந்து வண்ணம் தீட்டுதல் உட்பட பல குழு நடனங்களிலும் பங்கேற்ற மாணவர்களுக்கும் , பயிற்சி அளித்த ஆசிரியைகள் முத்துமீனாள் ,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment