Wednesday, 13 December 2017

வீட்டிலிருந்தே மொபைல் எண் - ஆதார் இணைப்பு: பி.எஸ்.என்.எல்., புது திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, வீட்டிலிருந்தபடியே மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும், 'ஐ.வி.ஆர்.எஸ்.,' வசதியை பி.எஸ்.என்.எல்., ஜனவரி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.
மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைக்கக்கோரி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. போலியான ஆவணத்தைக் காட்டி மொபைல் எண் பெறுதல் மற்றும் அதை பயன்படுத்தி நடக்கும் சமூக விரோத செயல்களைத் தடுக்கும் வகையில், மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிப்., 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல்., சேவை மையங்களில் நேரில் சென்றே தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது, வாடிக்கையாளர்களின் வேண்டுதலின்படி, வீட்டிலிருந்தே தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய வசதிகளை அறிமுகம் செய்ய பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெறும், 10 சதவீதத்தினர் மட்டுமே ஆதார் எண் இணைந்துள்ளனர். வயதானவர்கள் பலரும் பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆதார் எண் இணைக்க சிரமப்படுகின்றனர். இவர்களுக்காகவே, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்து கால் செய்தால் போதும், தங்கள் விபரங்கள் தெரிவித்தால் உடனே ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும். இவ்வசதி, வரும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. மொைபல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here