'பாரதியை வாசித்தால், அச்சம் நீங்கும்; அநீதியை தட்டிக்கேட்கும் எண்ணம் உருவாகும்,'' என, கவிஞர் உமா மகேஸ்வரிபேசினார்.
பாரதி சிந்தனையாளர் பணி மையத்தின் சார்பில், 47ம் ஆண்டு பாரதி விழா அன்னுாரில் நடந்தது. பணி மையத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சுப்பையன் துவக்கி வைத்தார்.
கவிஞர் உமா மகேஸ்வரி, 'எட்டையபுரத்து எரிமலை,' என்ற தலைப்பில் பேசியதாவது:
பாரதி உழைப்பாளியை நேசித்தவர். ஜாதிக்கொடுமையை எதிர்த்து எழுதியவர். அறிவுதான் தெய்வம் என்று கூறியவர்.நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று பாடியவர். பாரதி வீட்டு அடுப்படியில் செல்லம்மாளின் கண்ணீர் தான் அதிகம் இருந்திருக்கும்.
ஆனாலும் பாரதி, கவிதை எழுத செல்லம்மாள் துாண்டுகோலாக இருந்துள்ளார். மிடுக்கு, நேர்மை, செருக்கு, தவறுகளை தட்டிக்கேட்பது என, சகாப்தத்தின் ஈடு இணையற்ற கவிஞனாக பாரதி விளங்கியுள்ளார்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையில், பலருக்கு பாரதியை வாசிக்க நேரமில்லை. சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். பாரதியை வாசித்தால், அச்சம் நீங்கும், அநீதியை தட்டிக்கேட்கும் எண்ணம் உருவாகும். இதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொண்டு, பாரதியை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சிற்றிதழ்கள் சங்க தலைவர் புலவர் ரவீந்திரன், 'நமக்கு தொழில் கவிதை,' என்னும் தலைப்பில் பேசுகையில், ''பாரதி, வளர்ந்த நாடுகளில் பிறந்திருந்தால், இன்னும் உலகப்புகழ் பெற்ற கவிஞனாக இருந்திருப்பான்.
-தினமலர்
பாரதி சிந்தனையாளர் பணி மையத்தின் சார்பில், 47ம் ஆண்டு பாரதி விழா அன்னுாரில் நடந்தது. பணி மையத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சுப்பையன் துவக்கி வைத்தார்.
கவிஞர் உமா மகேஸ்வரி, 'எட்டையபுரத்து எரிமலை,' என்ற தலைப்பில் பேசியதாவது:
பாரதி உழைப்பாளியை நேசித்தவர். ஜாதிக்கொடுமையை எதிர்த்து எழுதியவர். அறிவுதான் தெய்வம் என்று கூறியவர்.நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று பாடியவர். பாரதி வீட்டு அடுப்படியில் செல்லம்மாளின் கண்ணீர் தான் அதிகம் இருந்திருக்கும்.
ஆனாலும் பாரதி, கவிதை எழுத செல்லம்மாள் துாண்டுகோலாக இருந்துள்ளார். மிடுக்கு, நேர்மை, செருக்கு, தவறுகளை தட்டிக்கேட்பது என, சகாப்தத்தின் ஈடு இணையற்ற கவிஞனாக பாரதி விளங்கியுள்ளார்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையில், பலருக்கு பாரதியை வாசிக்க நேரமில்லை. சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். பாரதியை வாசித்தால், அச்சம் நீங்கும், அநீதியை தட்டிக்கேட்கும் எண்ணம் உருவாகும். இதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொண்டு, பாரதியை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சிற்றிதழ்கள் சங்க தலைவர் புலவர் ரவீந்திரன், 'நமக்கு தொழில் கவிதை,' என்னும் தலைப்பில் பேசுகையில், ''பாரதி, வளர்ந்த நாடுகளில் பிறந்திருந்தால், இன்னும் உலகப்புகழ் பெற்ற கவிஞனாக இருந்திருப்பான்.
-தினமலர்
No comments:
Post a Comment