கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பணி நியமன முகமைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து, கலெக்டர் பழனிசாமி அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடங்கள் பணி நியமன முகமை மூலம் நிரப்பப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்ய தகுதி வாய்ந்த கணினி புள்ளி விவர பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், இளங்கலை பட்டப்படிப்பு, கணினி இயக்கு திறன், தட்டச்சு திறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் வழங்கப்படும்.இப்பணியை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணி நியமன முகமை பணியாளர்களை தேர்வு செய்யும். தங்களது பணி நியமன முகமையின் விவரங்களை, அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்டணம் ஆகியவற்றை தோட்டக்கலை துணை இயக்குனர், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். என்ற முகவரிக்கு வரும், 10ம் தேதி மாலை, 05:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணி நியமன முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் அதில் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்ய தகுதி வாய்ந்த கணினி புள்ளி விவர பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், இளங்கலை பட்டப்படிப்பு, கணினி இயக்கு திறன், தட்டச்சு திறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் வழங்கப்படும்.இப்பணியை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணி நியமன முகமை பணியாளர்களை தேர்வு செய்யும். தங்களது பணி நியமன முகமையின் விவரங்களை, அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்டணம் ஆகியவற்றை தோட்டக்கலை துணை இயக்குனர், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். என்ற முகவரிக்கு வரும், 10ம் தேதி மாலை, 05:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணி நியமன முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment