Sunday, 18 February 2018

தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம் – நீதிபதி கிருபாகரன்


தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியின் 90 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய நீதிபதி கிருபாகரன், ஒவ்வொருவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள் கையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.


ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வந்து சரியாக சொல்லிக் கொடுத்தால், அனைத்து மாணவர்களும் மாவட்ட ஆட்சியராகவோ, மருத்தவராகவோ, நீதிபதியாகவோ வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம் என்று குறிப்பிட்ட அவர் ஆங்கில அறிவு இருக்கும் தமிழர்கள்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here