Saturday, 17 February 2018

திண்டுக்கல்: மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு முகப்பில் வைக்கப்பட்டிருந்த மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு பேனரில் அம்பேத்கர் படத்தை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை ஏடுக்கவும் , அவர்களை கைது செய்யக் கோரியும், MVM கல்லூரியின் தமிழ் பேராசிரியை முருகேஸ்வரி அவர்கள் மீது
சாதிய கண்ணோட்டத்தில் தரக்குறைவாக பேசியும் ,அடித்து துன்புறுத்திய தமிழ்த்துறை பேராசிரியை நாகநந்தினி மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் , தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செம்பட்டி யூனியன் அலுவலகத்தின் முன் 16.02.2018 மாலை  நடைபெற்றது.


அதில் மாவட்ட பொருளாளர் பெ.வீ.ஸ்ரீனிவாச பெருமாள் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்று  கோஷத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொகுத்து வழங்கினார்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை மாவட்ட தலைவர் R.மணிமுருகன் தலைமையேற்றும் உரையாற்றியும்,கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் P.தங்கவேலு தலைமைஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தும் உரையாற்றியும் , மற்றும் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயலாளர்  P.துரைப்பாண்டி மற்றும்  நெடுஞ்சாலைத்துறை மாவட்ட பொருளாளர் R.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி அவர்கள் ,மத்திய மாநில அரசுSC/STஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட செயலாளர் S.சந்திரசேகரன் அவர்கள் ,பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வை.கணேசன் Dy BDO ( ஓய்வு)அவர்கள்,கூட்டமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் Dr.வேல்முருகன் பட்டதாரி ஆசிரியர் அவர்கள், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநிலத்தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் , கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.கணேஷ் காந்தி பட்டதாரி ஆசிரியர் அவர்கள் , கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் ராஜகோபால் உணவு பாதுகாப்பு அலுவலர்(ஓய்வு) அவர்கள் ,டாஸ்மாக் மாவட்ட செயலாளர் மகாமுனி அவர்கள், நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயலாளர் பி.துரைப்பாண்டி அவர்கள் ஆகியோர் மிகச்சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் நமது கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அ.சுப்பிரமணி BDO அவர்கள் மிகச்சிறப்பாக கண்டன உரை நிகழ்த்தினார்.இறுதியாக மாவட்ட பொருளாளர் பெ.வீ.ஸ்ரீனிவாச பெருமாள் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்ட இடத்தில் அம்பேத்கர் படம் பொறித்த  தகரத்தினாலான சங்க பலகை திறந்து வைக்கப்பட்டது. மேற்கண்ட  கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ப.பூசைமுத்து பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் AAO அவர்கள், துணைச்செயலாளர் தங்கராஜ் அவர்கள் மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா தலைமைஆசிரியர் அவர்கள், செயற்குழு உறுப்பினர் கருப்பையா வழக்கறிஞர் எழுத்தர் அவர்கள், ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட பொருளாளர் L.புஷ்பநாதன் தலைமைஆசிரியர்(ஓய்வு) அலுவலக மேலாளர் மற்றும் மக்கள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர்  லூர்து ராஜ் அவர்கள் , மாவட்ட துணைத்தலைவர் செல்லத்துரை சமையலர் அவர்கள் , மாவட்ட துணைச்செயலாளர் அழகராசாமி உதவியாளர் (பேரூராட்சித்துறை)அவர்கள் ,செயற்குழு உறுப்பினர் விஜயா அவர்கள்  ( ஆத்தூர் யூனியன் அலுவலகம்) , மாவட்ட தணிக்கையாளர் முருகன் காப்பாளர் அவர்கள், பட்டதாரி ஆசிரியர் ராஜா (பழனி) அவர்கள்,மக்கள் கூட்டமைப்பு மாவட்டதலைவர் பரமசிவம் அவர்கள் , மக்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தங்கவேல் அவர்கள்,படாதாரி ஆசிரியர் ரா.பொன்னையா அவர்கள், செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் Dy BDO அவர்கள்,பாலமுருகன் காப்பாளர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் , TNRDPUEA மாவட்ட செயலாளர் முருகவேல் அவர்கள் , மண்டல பொறுப்பாளர் வேதாந்தம் அவர்கள் ,மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,வேளாண்மைத்துறை சாமியம்மாள்AAOஅவர்கள் ,  செம்பட்டியைச் சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் கடாடக்காமன்பட்டி ஊர்பொதுமக்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டனர். 




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here