தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோருக்கு, ஒரு நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மோட்டார் வாகன சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்ட அனுமதி கிடையாது.
சட்டத்தை மீறி வாகனம் ஓட்டினால், அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது.ஐதராபாத் நகரில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஐதராபாதில் நடந்த வாகன சோதனையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டிய வாகனங்களை, போக்கு வரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து, ஆலோசனை வழங்கிய போக்குவரத்து பயிற்சி நிறுவனம், பின், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, ஐதராபாத் சிறப்பு நீதிமன்றம், 10 பெற்றோருக்கு, 500 ரூபாய் அபராதமும், ஒரு நாள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.மேலும், பிடிபட்ட சிறுவர்களை, சிறுவர் இல்ல காவலில் ஒரு நாள் வைக்கவும் உத்தரவிட்டது.
சட்டத்தை மீறி வாகனம் ஓட்டினால், அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது.ஐதராபாத் நகரில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஐதராபாதில் நடந்த வாகன சோதனையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டிய வாகனங்களை, போக்கு வரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து, ஆலோசனை வழங்கிய போக்குவரத்து பயிற்சி நிறுவனம், பின், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, ஐதராபாத் சிறப்பு நீதிமன்றம், 10 பெற்றோருக்கு, 500 ரூபாய் அபராதமும், ஒரு நாள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.மேலும், பிடிபட்ட சிறுவர்களை, சிறுவர் இல்ல காவலில் ஒரு நாள் வைக்கவும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment