அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகள் புதிய முறையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மா.விஜயகுமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் துறைத்தேர்வுகள் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய தேர்வுமுறையில் நடத்தப்படும். 17 தேர்வுகள் முற்றிலும் கொள்குறிவகை முறையிலும் (அப்ஜெக்டிவ்), 33 தேர்வு கள் முற்றிலும் விரிவாக விடையளிக்கும் முறையிலும், 97 தேர்வு கள் இருமுறை கலந்தும் அமைந்திருக்கும்.
திருத்தியமைக்கப்பட்ட புதிய முறையின்படி, கொள்குறி வகைத்தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதார ரின் பெயர், பதிவெண், துறைத்தேர்வின் பெயர், குறியீட்டு எண், தேர்வு மையத்தின் பெயர், தேர்வு நாள் ஆகிய சுய விவர குறிப்புக்களை உள்ளடக்கிய தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்கள் முதன் முறை யாக தற்போதைய துறைத்தேர் வில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதன் மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. துறைத்தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள லாம்.
புதிய தேர்வுமுறை
விரிவான விடை எழுதும் முறையைக் கொண்ட துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர் கள் தங்களது பதிவெண் மற்றும் துறைத்தேர்வின் பெயர் ஆகியவற்றை விடைத்தாளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள படியே எழுத வேண்டும். கொள் குறி வகையுடன் இணைந்த விரிவான விடைகள் எழுதும் முறையின்படி ஒருங்கே அமைக்கப்பெற்ற துறைத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் கொள்குறி தேர்வையும் விரிவான விடை எழுதும் முறையிலான தேர்வையும் கட்டாயமாக எழுத வேண்டும். மேலும் இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே விண்ணப்பதாரர் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.
நேரடி நியமனத்தின் மூலம் ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் உதவி இயக்குநர்களுக்கும், மற்றும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணி புரியும் அமைச்சுப் பணியாளர் களுக்கும் புதிதாக துறைத்தேர்வுகள் தேர்வாணையத்தால் முதன்முறையாக நடத்தப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் கொள்குறி வகை தேர்வுகள் அல்லது விரிவான விடை எழுதும் தேர்வுகள் அல்லது இரண்டும் அடங்கிய தேர்வுகளை எழுதும் பட்சத்தில் ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் விரிவான விடை எழுதும் விடைத்தாள்களைப் பெற்றவுடன் தங்களது பெயர், பதிவெண், புகைப்படம் அடங்கிய துறைத்தேர்வுகளுக்கான வருகைத்தாளில் கையொப்பமிட வேண்டும். துறைத்தேர்வுகளுக்கான விதிமுறைகள், கால அட்டவணை மற்றும் அனுமதிக்கப்பட்ட புத்தகங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment