Monday, 5 March 2018

ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

நோபல் பரிசு பெற்ற தமிழர்  சர்.சி.வி.ராமன் அவர்கள் கண்டு பிடித்த ராமன் விளைவிற்கு நோபல் பரிசு வழங்கிய தினம் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக  கொண்டாடப்படுகிறது.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.சர்.சி.வி.ராமன்  நினைவாக அறிவியல் கண்காட்சி, அவரது வாழ்க்கை வரலாறு, பேச்சுப்போட்டி நடைபெற்றது.இதில் பெத்தநாயக்கன்பாளையம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மாலதி கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here