தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து,முழுமையாக அறிந்து கொள்ளவும், சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,கோவையில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.சிட்டிசன் வாய்ஸ் கிளப் சார்பில், மே 12ம் தேதி, கோவை - திருச்சி ரோட்டிலுள்ள விவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.
காலனி குடியிருப்பு சங்கங்கள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் என முதலில் முன் பதிவு செய்யும் 50 பேர் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.இந்த முகாமில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து, திருச்சி வழக்கறிஞர் மார்ட்டின் பயிற்சி தருகிறார்.
ஊழல் தடுப்பு சங்கத்தின் நிர்வாகி வேலு, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஜார்ஜ், சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் ஜெயராமன் ஆகியோர், நுகர்வோர் சட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் விதிமுறைகள், விளக்கங்கள், பயன்கள் மற்றும் உரிமைகளை விளக்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.பயிற்சியில் பங்கேற்போருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புத்தகம் வழங்கப்படுகிறது. நுகர்வோருக்கான இணைய தளத்தை கர்னல் ஸ்ரீதரன் துவக்கி வைக்கிறார்.அரசியல் சார்பற்ற, மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூகசேவை குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விருப்பத்தை, மே 5ம் தேதிக்குள் இ-மெயில், (citizensvoiceclub@gmail.com) தொலைபேசி 0422-2302527 மற்றும் வாட்ஸ் ஆப் (9443041105 ) மூலம் முன் பதிவு செய்யலாம் என, சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காலனி குடியிருப்பு சங்கங்கள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் என முதலில் முன் பதிவு செய்யும் 50 பேர் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.இந்த முகாமில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து, திருச்சி வழக்கறிஞர் மார்ட்டின் பயிற்சி தருகிறார்.
ஊழல் தடுப்பு சங்கத்தின் நிர்வாகி வேலு, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஜார்ஜ், சிட்டிசன் வாய்ஸ் கிளப் தலைவர் ஜெயராமன் ஆகியோர், நுகர்வோர் சட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் விதிமுறைகள், விளக்கங்கள், பயன்கள் மற்றும் உரிமைகளை விளக்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.பயிற்சியில் பங்கேற்போருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புத்தகம் வழங்கப்படுகிறது. நுகர்வோருக்கான இணைய தளத்தை கர்னல் ஸ்ரீதரன் துவக்கி வைக்கிறார்.அரசியல் சார்பற்ற, மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூகசேவை குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விருப்பத்தை, மே 5ம் தேதிக்குள் இ-மெயில், (citizensvoiceclub@gmail.com) தொலைபேசி 0422-2302527 மற்றும் வாட்ஸ் ஆப் (9443041105 ) மூலம் முன் பதிவு செய்யலாம் என, சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment