Sunday, 29 April 2018

7.87 கோடி மக்களுக்கு 8 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு : தமிழக அரசின் வருவாயில் 61 சதவீதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

7.87 கோடி மக்களுக்கு 8 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு : தமிழக அரசின் வருவாயில் 61 சதவீதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது.தமிழகத்தின் 69 சதவீத நிதிவருவாயில் 61 சதவீதம், அரசு ஊழியர்களுக்கே செலவிடப்படுகிறது. மீதியுள்ள 8 சதவீதம் மட்டுமே 7.87  கோடி மக்களுக்கு செலவிடப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் இடைப்பாடியில்,12.18 கோடி  மதிப்பிலான  10 திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் பணிகளை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:


அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாட்டை எண்ணிப்பார்க்க வேண்டும். 7வது ஊதியக்குழுவை அமல்படுத்தி அனைவருக்கும் சம்பளத்தை  உயர்த்தியுள்ளோம்.69 சதவீத நிதிவருவாயை மாநில அரசு ஈட்டுகிறது. மத்திய அரசு ஒதுக்கீடாக 31 சதவீத நிதி கிடைக்கிறது. இதில் மாநில நிதி வருவாயில் 61 சதவீதம்  அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது. 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 61 சதவீதம் நிதி செலவிடப்படும்  நிலையில், மீதமுள்ள 7.87 கோடி மக்களுக்கு 8 சதவீத நிதி மட்டுமே செலவிடப்படுகிறது. அரசு ஊழியர்கள் சிந்தித்து அரசுக்கு துணை நிற்கவேண்டும்.  இவ்வாறு முதல்வர் பேசினார். 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here