Friday, 28 September 2018

ஆர்.டி.ஐ., கேள்விக்கு தகவல் தருவதில்லை!ஊழல் மலிந்துள்ளதாக புகார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தொடர்பற்ற விபரங்கள் தருகின்றனர். அல்லது குழப்பமான பதில்களையே அளிக்கின்றனர்.
இதனால், நீலகிரி மாவட்ட மக்கள், இந்த சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். குறிப்பாக, வருவாய்த் துறை, போக்குவரத்துக் கழகம், கேபிள் 'டிவி' உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில், சரியான அல்லது முறையான பதில் அளிப்பதில்லை. வருவாய் துறையில் இருந்து பெறப்படும் பதில்கள் எந்தவிதத்திலும் மக்களுக்கு பயனளிப்பதில்லை.


'முடிந்த வரையில் பதில் கொடுக்க வேண்டாம்' என, வாய்மொழி உத்தரவு அளித்திருப்பதாக,பெயர் கூற விரும்பாத அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேல் முறையீடு செய்யும்போது, மாநில ஆணையத்தில் ஏராளமான வழக்குகள் குவிந்து கிடப்பதால், முடிந்தவரை அந்தந்த அலுவலகங்களில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தகவல் பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த செப்., 12ம் தேதியை, ஆண்டுதோறும் தகவல் பெறும் உரிமை தினமாக அனுசரிக்க, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், நீலகிரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காதது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர் ஆல்துரை கூறுகையில், ''அரசு கேபிள் 'டிவி' கட்டண ரசீது குறித்த கேள்விக்கு, 'இதுகுறித்த விபரம் இந்த அலுவலகத்தில் இல்லை' என்ற பதிலை அளித்துள்ளனர். இப்படி தகவல்களை மறைப்பது, நிர்வாகத்தில் மலிந்துள்ள லஞ்ச ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here