பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன்சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூடும் நிலையில் உள்ளது.சேரம்பாடி அருகேயுள்ள நாயக்கன்சோலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த, 1998 ஜூன் 6ல் அரசு நடுநிலைப்பள்ளி திறக்கப்பட்டது, வாகன வசதிகள் இல்லாத இந்த பகுதியில் பள்ளி வந்ததால், மாணவர்கள் பயன்பெற்றனர். ஆரம்பத்தில் இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.தொடர்ந்து, இங்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்காததால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, இந்த பள்ளிக்கு பெரியசோலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வரும் நிலையில், 17 மாணவர்கள், 18 மாணவியர் என 35 மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், மற்றொரு வகுப்பறையிலும் அமர்ந்து படிக்க வைக்கப்படுகின்றனர். இதனால் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு மின் வசதியில்லாததால், அருகிலுள்ள கோவிலிருந்து, மின் சப்ளை வழங்கப்பட்டு, பள்ளியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் இயக்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் கூறுகையில், ' இங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து, பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு நிரந்தர தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்றார்.
ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், மற்றொரு வகுப்பறையிலும் அமர்ந்து படிக்க வைக்கப்படுகின்றனர். இதனால் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு மின் வசதியில்லாததால், அருகிலுள்ள கோவிலிருந்து, மின் சப்ளை வழங்கப்பட்டு, பள்ளியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் இயக்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் கூறுகையில், ' இங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து, பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு நிரந்தர தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment