'கார்த்திக் பத்திரிக்கை அனுப்பியிருக்கிறான்; புதுச்சேரியில திருமணம். அவுங்க அம்மா கையை பிடிச்சபடி, பள்ளியில் சேர வந்த முகம்தான் நினைவுக்கு வருது. பிஎச்.டி., படித்துக் கொண்டிருப்பதாக, போனில் சொன்னான்,'' என, முகம் முழுக்க பரவசம் பரவ, சக ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், சிறப்பு ஆசிரியர் அன்புசெல்வம்.நினைவுகளின் நீட்சியில் இருந்து மீளாதவருடன், சிறிய அறிமுகத்துக்கு பின், 'சிறப்பு ஆசிரியர் பணி சற்று சிரமமானது தானே' என்றதும், ஏறிட்டு பார்த்து, நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
கடந்த, 1990ல், பணியில் சேர்ந்தேன்; 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சாதாரண குழந்தைகளின் உலகத்தில் இருந்து வேறுபட்டவர்கள் சிறப்பு குழந்தைகள். குறைபாடுகளுக்கு ஏற்ப, அவர்களது எண்ணம், சூழல், மனஓட்டம் என, அனைத்திலும் வேறுபாடு இருக்கும். கடவுள் உங்கள் முன் தோன்றி, கண், காது இரண்டில் எது இல்லாமல், இருக்கவே முடியாது என்று கேட்டால், பதிலென்ன கூறுவீர்கள் என்றார்.
கண் தான் முக்கியம் என்றதும், மீண்டும் தொடர்ந்தார்.கண் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளால், அனைத்தையும் கேட்க முடியும்; பேச முடியும். அதற்கு, கற்பனை உருவம் கொடுத்துக் கொள்ள முடியும். தொடு உணர்வு மூலம், பொருட்களை அடையாளம் காண்பர். ஆனால், செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் உலகம் புதிது. எல்லாவற்றையும் பார்க்கலாம். ஆனால், எதை எதோடு தொடர்புபடுத்துவது என, தெரியாது. மொழியை உச்சரிக்காததால், அதன் அர்த்தம் புரிய வைப்பது எளிதல்ல. குறியீடு மூலம், அனைத்தையும் உணர்த்த முடியாது. இதை விட, அறிவுத்திறன் குறைந்த குழந்தைகள் மனநிலை வேறுபட்டிருக்கும்.இவர்களுக்கு, அன்றாட பழக்க வழக்கங்கள் கற்பிப்பதில் இருந்து, கல்வி துவங்குகிறது. தற்போதைய உள்ளடங்கிய கல்வி முறையில், சாதாரண குழந்தைகளுடன் படிப்பதால், இவர்களிடம் பெரிதளவில் மாற்றம் கொண்டு வர முடிகிறது.
மாற்றுத்திறன் குழந்தைகளை, மனரீதியாக பலப்படுத்த வேண்டும். அவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அளித்தால், எத்ததைய தடைகளையும் எளிதில் தகர்த்தெறிவர்.என் மாணவர்கள் பலர், ஆசிரியர்களாக, வக்கீல்களாக, வங்கி பணியாளர்களாக உள்ளனர். பிளஸ் 2 முடித்த அனைவரும் உயர்கல்வி படிக்கின்றனர். என்னிடம், பிளஸ் 2 வரை படித்த கார்த்திக் என்ற மாணவனுக்கு திருமணம். அழைப்பிதழ் வந்துள்ளது என்றதும், மீண்டும் பரவசமானது முகம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைப்பதோடு, தன்னை விட உயரும்போது, மாணவனை பார்த்து பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்!
கடந்த, 1990ல், பணியில் சேர்ந்தேன்; 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சாதாரண குழந்தைகளின் உலகத்தில் இருந்து வேறுபட்டவர்கள் சிறப்பு குழந்தைகள். குறைபாடுகளுக்கு ஏற்ப, அவர்களது எண்ணம், சூழல், மனஓட்டம் என, அனைத்திலும் வேறுபாடு இருக்கும். கடவுள் உங்கள் முன் தோன்றி, கண், காது இரண்டில் எது இல்லாமல், இருக்கவே முடியாது என்று கேட்டால், பதிலென்ன கூறுவீர்கள் என்றார்.
கண் தான் முக்கியம் என்றதும், மீண்டும் தொடர்ந்தார்.கண் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளால், அனைத்தையும் கேட்க முடியும்; பேச முடியும். அதற்கு, கற்பனை உருவம் கொடுத்துக் கொள்ள முடியும். தொடு உணர்வு மூலம், பொருட்களை அடையாளம் காண்பர். ஆனால், செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் உலகம் புதிது. எல்லாவற்றையும் பார்க்கலாம். ஆனால், எதை எதோடு தொடர்புபடுத்துவது என, தெரியாது. மொழியை உச்சரிக்காததால், அதன் அர்த்தம் புரிய வைப்பது எளிதல்ல. குறியீடு மூலம், அனைத்தையும் உணர்த்த முடியாது. இதை விட, அறிவுத்திறன் குறைந்த குழந்தைகள் மனநிலை வேறுபட்டிருக்கும்.இவர்களுக்கு, அன்றாட பழக்க வழக்கங்கள் கற்பிப்பதில் இருந்து, கல்வி துவங்குகிறது. தற்போதைய உள்ளடங்கிய கல்வி முறையில், சாதாரண குழந்தைகளுடன் படிப்பதால், இவர்களிடம் பெரிதளவில் மாற்றம் கொண்டு வர முடிகிறது.
மாற்றுத்திறன் குழந்தைகளை, மனரீதியாக பலப்படுத்த வேண்டும். அவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அளித்தால், எத்ததைய தடைகளையும் எளிதில் தகர்த்தெறிவர்.என் மாணவர்கள் பலர், ஆசிரியர்களாக, வக்கீல்களாக, வங்கி பணியாளர்களாக உள்ளனர். பிளஸ் 2 முடித்த அனைவரும் உயர்கல்வி படிக்கின்றனர். என்னிடம், பிளஸ் 2 வரை படித்த கார்த்திக் என்ற மாணவனுக்கு திருமணம். அழைப்பிதழ் வந்துள்ளது என்றதும், மீண்டும் பரவசமானது முகம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி உழைப்பதோடு, தன்னை விட உயரும்போது, மாணவனை பார்த்து பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்!
No comments:
Post a Comment