விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் முறையை புகுத்திய சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கு தேசிய அளவிலான விருது வழங்கி உள்ளனர்.
மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டுக்கு தேசிய அளவில் நடந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என 240 பேர் தங்களின் கற்பிக்கும் முறையை சமர்ப்பித்தனர்.
இறுதி சுற்றில் 17 மாநிலங்களை சேர்ந்த 28 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் கற்பிக்கும் முறை குறித்த அறிக்கையை பெற்றனர். இவர்களில் 25 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.அதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் திலிப்ராஜா விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான விருதினை பெற்றார்.விருது பெற்ற ஆசிரியர் திலிப்ராஜாவை தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன், முறைசாரா கல்வி இயக்குநர் லதா ஆகியோர் பாராட்டினார்கள்.
மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டுக்கு தேசிய அளவில் நடந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என 240 பேர் தங்களின் கற்பிக்கும் முறையை சமர்ப்பித்தனர்.
இறுதி சுற்றில் 17 மாநிலங்களை சேர்ந்த 28 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் கற்பிக்கும் முறை குறித்த அறிக்கையை பெற்றனர். இவர்களில் 25 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.அதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் திலிப்ராஜா விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான விருதினை பெற்றார்.விருது பெற்ற ஆசிரியர் திலிப்ராஜாவை தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன், முறைசாரா கல்வி இயக்குநர் லதா ஆகியோர் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment