Wednesday, 10 October 2018

மழைக்காலத்தில் பாய்ந்து வரும் நீரோட்டத்தை செல்பி எடுக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும்:அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

 வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகம் குறித்து அவ்வளவு சீக்கிரம் அறிய முடியாது. நீர் நிலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட நீரோட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாய்ந்து வரும் நீரோட்டம் குறித்து இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்பி எடுக்க முயற்சிக்கிறார்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் குளத்தில் ஆற்றில் நீர்நிலைகளில் குளிக்க குழந்தைகளை அனுமதிக்க கூடாது. துணிகள் துவைக்க கால்நடைகளை குளிப்பாட்டக்கூடாது. விலை மதிப்பு மிக்க மனித உயிரிழப்பை தவிர்க்க வேண்டும். என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். .

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here