Wednesday, 31 October 2018

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூத்தாம்பட்டியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்  ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூத்தாம்பட்டியில்  பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்  சந்தானம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அன்னாள்செல்வி வரவேற்றார்.பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். பள்ளி  நடைமுறை  மற்றும்  பள்ளி வளர்ச்சி  பற்றி கலந்துரையாடல்  செய்யப்பட்டது.

     
ஆசிரியர்கள்  கோபிநாதன் ,கோதண்டராமன் ,மணிமாறன் , ஜோஸ்பின் ஜூலியட்,தாய்மூகாம்பிகை,சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து கூறினர்.கிராமப் புறங்களில்  செயல்படும்  இப்பள்ளியில்  ஆசிரியர்களின்  கடின உழைப்பு மற்றும்  பொதுமக்களின்  ஒத்துழைப்பு  காரணமாக  இவ்வாண்டு  அதிகபட்சமாக  206 மாணவர்கள்  சேர்ந்து  பயின்று  வருகின்றனர்.ஒன்றியத்தில் அதிக அளவாக வெளியூர்  மாணவர்கள்  100 க்கு மேல்   பயின்று வருவது  குறிப்பிடத்தக்கது. 

       இப்பள்ளியில்  உபரிபணியிட மாறுதல்  இல்லை.  6-8 மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு  கூடுதல் சிறப்பாசிரியர்கள்   ஓவியம்,வாழ்வியல் திறன்  ஆசிரியர்கள்  கடந்த வாரம்  பணியேற்றுள்ளார்கள். அவர்களுக்கு கூட்டத்தில் பணி சிறக்க  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here