Thursday, 15 November 2018

தாளவாடி: பள்ளி மாணவர்களிடையே மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், பள்ளி மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கோடிபுரத்தை சேர்ந்த, 17 வயதுள்ள மாணவர் இங்குள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, 17 வயது மாணவன் விடுதியில் தங்கி, அரசு மார்டன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.


இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மதியம், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு மாணவன், மற்றொரு மாணவனை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அந்த மாணவன், சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here