பேருந்து போக்குவரத்து - தவிர்க்க அறிவுறுத்தல்
* கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
அரசு, தனியார் பேருந்துகளின் இயக்கத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
கஜா புயலால் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்து சேவையை நிறுத்துவது பற்றி ஆலோசனை
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் கஜா புயல் காரணமாக ஒத்திவைப்பு.
*சென்னை எழும்பூரில் இருந்து இன்று புறப்படும் கீழ்வரும் ரயில்கள் முழுமையாக ரத்து.*
16179 மன்னார்குடி 'மன்னை விரைவு ரயில்
16175/16185 காரைக்கால்/ வேளாங்கண்ணி விரைவு ரயில்
16865 தஞ்சை 'உழவன் விரைவு ரயில்
*16191 தாம்பரம் - நெல்லை அந்தியோதயா ரயில் இன்று(நவ 15) மயிலாடுதுறை, தஞ்சை தடத்திற்கு பதிலாக விருத்தாசலம், திருச்சி மார்கத்தில் இயக்கம்.
*16192 நெல்லை - தாம்பரம் அந்தியோதயா ரயில் இன்று(நவ 15) தஞ்சை, மயிலாடுதுறை தடத்திற்கு பதிலாக விருத்தாசலம், திருச்சி மார்கத்தில் இயக்கம்.*
*கஜா புயல் : அவசர உதவி எண்கள்
திருவாரூர் மாவட்டம்: 1077, 04366- 226040, 226050, 226080, 226090.
கடலூர் மாவட்டம்: 1077, 04142- 220700, 221113, 233933, 221383
காரைக்கால்: 1070, 1077, 04368- 228801, 227704
வாட்ஸ் அப்: 9488770024
மின் வயர் புகார்களுக்கு: 04368- 222694
*தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன*
தமிழகம் எங்கும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன.
*கஜா புயல் காரணமாக பாரதிதாசன் பல்கலை உறுப்புக்கல்லூரிகளின் பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
*கடலூர் நாளை விடுமுறை
*கஜா புயல் : கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*
*நாகை மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை, திருவாரூர் ராமநாதபுரம் நிவாரண முகாம்களில் 2572 பேர் தங்க வைப்பு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
*புதுச்சேரி காரைக்கால் நாளை விடுமுறை
கஜா புயல் காரணமாக புதுவை, காரைக்கால், கடலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 16-11-2018) விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
*கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
*ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு
*கஜா புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
*கஜா புயல் காரணமாக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு*
*நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை*
*கஜா புயல் எதிரொலி நாளை ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*
*புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகை செல்லும் அரசு பேருந்துகள் கிழக்கு கடற்கரை சாலையை தவிர்த்து, பைபாஸ் சாலை வழியாக செல்ல அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
*கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் புதுச்சேரி அரசு பேருந்துகள் நிறுத்தம்.
*காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
*கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
*கஜா புயல் காரணமாக திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
*கடலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் இன்று ( 15.11. 2018 ) இரவு 8.00 மணிக்குமேல் சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் ஏதும் இயக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன்*
*தஞ்சை - நாளை விடுமுறை
கஜாபுயல் எதிரொலி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*தஞ்சை - திருவாரூர் நாளை விடுமுறை*
கஜாபுயல் எதிரொலி தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*நாகையில் கனமழை எதிரொலி, கடலோர பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு.
கஜா புயலையொட்டி வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்.
*ஹெலிகாப்டர்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல், உணவு பொருட்களுடன் தென் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
*சென்னையில் இருந்து மேலும் 3 கப்பல்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
*தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்
*கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை(16.11.18) வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ்.
*கஜா புயல் முன்னெச்சரிக்கை அரியலூர் அரசினர் கலைக்கல்லூரியில் நாளை (16.11.18) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடாமல் ரத்து - கல்லூரி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
*கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 40 முகாம்கள் செயல்பட தொடங்கின.3246 குடும்பங்களை சேர்ந்த 12,398 பேர் முகாம்களில் தஞ்சம்.
முகாம்களில் இருப்போருக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு
*கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி
*கஜா புயலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்
*கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து.தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பல்கலை பதிவாளர் அறிவிப்பு.
*புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - கல்லூரி முதல்வர்
*நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
*வேதாரண்யம், தோப்புத்துறை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை
*புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென்று குறையும், அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம், மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று வீசும் - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
*இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம்
*சிதம்பரம் பஸ் நிலையத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.வெளியூர்களுக்கு செல்லும் ஒரு சில பேருந்துகளைத் தவிர பெரும்பாலான பஸ் போக்குவரத்து நிறுத்தம்.
*காரைக்காலுக்கு கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் உள்ளது*
*கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையை கடக்கும்*
*இரவு 10.30 மணியில் இருந்து கடலோர பகுதிகளில் வேகமான காற்று வீசக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
*ராமேஸ்வரம், பாம்பன் & அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.*
*பாம்பன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.*
*கஜா புயலில் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் சூறைக்காற்று அதிகளவில் வீசி வருகிறது.கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 11 கிலோ மீட்டராக உள்ளது - வானிலை மையம்
*கஜா புயலின் கண் பகுதியின் அகலம் 26 கிலோ மீட்டர் - வானிலை ஆய்வு மையம்
*8 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:*
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
ReplyForward
|
No comments:
Post a Comment