Monday, 28 January 2019

பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக்

வரும் 1 ம் தேதி முதல் தலைமைசெயலக ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகம் முழுவதும் சம்பளம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் கூட்டமைப்பான ஜக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகள் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலக அலுவலக ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.இந்த அலுவலர்கள் சங்க நிர்வாகியான அந்தோணி நிருபர்களிடம் பேசுகையில்: வரும் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், அதற்குபின்னரும் அரசு அலட்சியம் செய்தால், வெள்ளிக்கிழமை (பிப்.1ம் தேதி) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தார்.ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், கடுமையாக சாடியுள்ளார். பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆசிரியர்கள் கூலி தொழிலாளர்கள் போல் போராடுவது அழகல்ல. மேலும் இந்த போராட்டம் வரும்கால சந்ததியினரை பாதிக்கும். போராட்டத்தை கைவிடுவது தொடர்பான முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என கூறினார்.
-தினமலர்

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here