புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள வகுத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தலட்சுமி தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். வட்டார வளமைய பயிற்றுனர் நிர்மலாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி, ஊர்கவுண்டர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளிக்கு 30 சென்ட் நிலம் தானமாக வழங்கிய தம்பிக்கவுண்டர் (எ) கருப்பகவுண்டர் அவர்களின் குடும்பத்தினருக்கும், ரூ 25000 மதிப்பில் மடிக்கணினி வழங்கிய மருத்துவர்கள் சரவணன் - காசிமீனா தம்பதியினருக்கும், ரூ 13000 மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிய சென்னை கல்வி விதைகள் அமைப்புக்கும், 1000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி & பிரிண்டர் வழங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சரவணன் அவர்களுக்கும், ரூ 10000 மதிப்பில் டைல்ஸ் அமைத்து கொடுத்த ஆறுச்சாமி அவர்களுக்கும், பள்ளி மைதான பராமரிப்புக்கு ரூ 5000 வழங்கிய பணிநிறைவு தலைமை ஆசிரியர்கள் தங்கவேல் முருகையன் - தனலட்சுமி தமபதியினருக்கும், ரூ 5000 மதிப்பில் கம்ப்யூட்டர் வழங்கிய விழுதுகள் நற்பண்பு கல்வி மையத்துக்கும். பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு ரூ 10000 வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கும், மரக்கன்றுகளை வழங்கி பராமரித்து வரும் ட்ரீ அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் அவர்களுக்கும், பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள விடியல் அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுமடல் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், முன்னாள் மாணவர்கள், கிராம கல்வி குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தலட்சுமி தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். வட்டார வளமைய பயிற்றுனர் நிர்மலாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி, ஊர்கவுண்டர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளிக்கு 30 சென்ட் நிலம் தானமாக வழங்கிய தம்பிக்கவுண்டர் (எ) கருப்பகவுண்டர் அவர்களின் குடும்பத்தினருக்கும், ரூ 25000 மதிப்பில் மடிக்கணினி வழங்கிய மருத்துவர்கள் சரவணன் - காசிமீனா தம்பதியினருக்கும், ரூ 13000 மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிய சென்னை கல்வி விதைகள் அமைப்புக்கும், 1000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி & பிரிண்டர் வழங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சரவணன் அவர்களுக்கும், ரூ 10000 மதிப்பில் டைல்ஸ் அமைத்து கொடுத்த ஆறுச்சாமி அவர்களுக்கும், பள்ளி மைதான பராமரிப்புக்கு ரூ 5000 வழங்கிய பணிநிறைவு தலைமை ஆசிரியர்கள் தங்கவேல் முருகையன் - தனலட்சுமி தமபதியினருக்கும், ரூ 5000 மதிப்பில் கம்ப்யூட்டர் வழங்கிய விழுதுகள் நற்பண்பு கல்வி மையத்துக்கும். பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு ரூ 10000 வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கும், மரக்கன்றுகளை வழங்கி பராமரித்து வரும் ட்ரீ அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் அவர்களுக்கும், பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள விடியல் அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுமடல் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், முன்னாள் மாணவர்கள், கிராம கல்வி குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment