Thursday, 16 May 2019

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: மே 18ல் விண்ணப்ப பதிவு நிறைவு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு, மே, 18ல் நிறைவடைகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், தொடக்க நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இடங்கள் ஆகிய விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 20 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் பள்ளி, குழந்தையின் இருப்பிடத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, அனைத்து வட்டார வள மையங்கள், வட்டார கல்வி, மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலகங்களில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே, 18 வரை மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்பதால், மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here