பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு மறுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குறளரசன் தாக்கல் செய்த மனு: பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில், ஒதுக்கீடு மறுத்து, தமிழக சுகாதாரத்துறை, 2018 ஜூன், 1ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும், ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.
நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்தவர்.நிஜ ஹீரோவாக போற்றப்படுகிறார். அவருக்கு ஒரு மகள் இருப்பதாக, கற்பனை செய்து கொள்வோம்.
அவர், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். பாதுகாப்பு படையினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்குமா என கேள்வி எழுந்தால், இல்லை என்று தான் பதில் வரும்.அரசாணைஅபிநந்தன் பணிக்கு, &'குட்பை&' சொல்லி விடைபெறும் பட்சத்தில், அவரது மகள், முன்னாள் படை வீரர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டின் கீழ்தான் பயனடைய முடியும்.
மனுதாரரின் தந்தை, இந்திய ராணுவத்தில், இளநிலை அதிகாரியாக உள்ளார். மனுதாரர், 2018ல், &'நீட்&' தேர்வு எழுதியுள்ளார். அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.அவர், இடஒதுக்கீடு அடிப்படையில், உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படை வீரர்களின் வாரிசுக்கு ஒதுக்கீடு மறுத்து, 2018ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.மருத்துவம், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி சாராத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, இடஒதுக்கீடு அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும் என, 2017 நவ., 30ல், மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் படைவீரர், இறந்தவர், பணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, தமிழக அரசு, 1979ல் அரசாணை வெளியிட்டு உள்ளது. இதை, 2018ல் வெளியான அரசாணையில் தெரிவிக்கவில்லை. இது, அறிவுக்கு பொருத்தமானது அல்ல; அது சட்ட விரோதமானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்க்கையில், பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க, வரும் கல்வி ஆண்டில், தமிழக தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-தினமலர்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குறளரசன் தாக்கல் செய்த மனு: பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில், ஒதுக்கீடு மறுத்து, தமிழக சுகாதாரத்துறை, 2018 ஜூன், 1ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும், ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.
நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்தவர்.நிஜ ஹீரோவாக போற்றப்படுகிறார். அவருக்கு ஒரு மகள் இருப்பதாக, கற்பனை செய்து கொள்வோம்.
அவர், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். பாதுகாப்பு படையினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்குமா என கேள்வி எழுந்தால், இல்லை என்று தான் பதில் வரும்.அரசாணைஅபிநந்தன் பணிக்கு, &'குட்பை&' சொல்லி விடைபெறும் பட்சத்தில், அவரது மகள், முன்னாள் படை வீரர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டின் கீழ்தான் பயனடைய முடியும்.
மனுதாரரின் தந்தை, இந்திய ராணுவத்தில், இளநிலை அதிகாரியாக உள்ளார். மனுதாரர், 2018ல், &'நீட்&' தேர்வு எழுதியுள்ளார். அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.அவர், இடஒதுக்கீடு அடிப்படையில், உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படை வீரர்களின் வாரிசுக்கு ஒதுக்கீடு மறுத்து, 2018ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.மருத்துவம், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி சாராத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, இடஒதுக்கீடு அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும் என, 2017 நவ., 30ல், மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் படைவீரர், இறந்தவர், பணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, தமிழக அரசு, 1979ல் அரசாணை வெளியிட்டு உள்ளது. இதை, 2018ல் வெளியான அரசாணையில் தெரிவிக்கவில்லை. இது, அறிவுக்கு பொருத்தமானது அல்ல; அது சட்ட விரோதமானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்க்கையில், பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க, வரும் கல்வி ஆண்டில், தமிழக தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-தினமலர்
No comments:
Post a Comment