தேர்வு எழுதியவர்களில் பலர் கணித கேள்விகள் பல நீளமாக இருந்தன எனவும் கல்விசார் உளவியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன எனவும் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் கணிதம், கற்பித்தல் மற்றும் குழந்தை மேம்பாடு குறித்த கேள்விகள் கடினமாக இருந்தன என பலர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றும் நாளையும் (ஜூன் 9 மற்றும் 10) இரண்டு தாள்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 1,081 தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்தது.
இன்று நடைபெற்ற முதல்தாள் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை எனவும் விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் எனவும் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் சார்ந்த கேள்விகளும் கணிதம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றன.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றும் நாளையும் (ஜூன் 9 மற்றும் 10) இரண்டு தாள்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 1,081 தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்தது.
இன்று நடைபெற்ற முதல்தாள் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை எனவும் விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் எனவும் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் சார்ந்த கேள்விகளும் கணிதம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment