விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி வாகனத்திலிருந்து இறங்கும்போது, பின்பக்க சக்கரத்தில் சிக்கி, 2ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சிறுமதுரை கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல், டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளர். இவரது மகன் முகுந்தன்(6). திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், கோடை கால விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றார்.
மாலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்குச்செல்ல பள்ளி வாகனத்தில் பயணித்தார். குடியிருப்பு பகுதியை வந்தடைந்ததும், வாகனத்திலிருந்து முகுந்தன் கீழே இறங்கிச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக பின்பக்க சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சிறுவனின் சடலத்தை திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சிறுமதுரை கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல், டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளர். இவரது மகன் முகுந்தன்(6). திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், கோடை கால விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றார்.
மாலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்குச்செல்ல பள்ளி வாகனத்தில் பயணித்தார். குடியிருப்பு பகுதியை வந்தடைந்ததும், வாகனத்திலிருந்து முகுந்தன் கீழே இறங்கிச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக பின்பக்க சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சிறுவனின் சடலத்தை திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment