தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேற்றியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய நிதி கோரப்பட்டுள்ளது. பி.எச்.டி. மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக, பிழை கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. தமிழக அரசுடன் ஆலோசித்து பேராசிரியர்கள் நியமனம் மற்றும் நிதிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய நிதி கோரப்பட்டுள்ளது. பி.எச்.டி. மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக, பிழை கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. தமிழக அரசுடன் ஆலோசித்து பேராசிரியர்கள் நியமனம் மற்றும் நிதிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமணி
No comments:
Post a Comment