வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் ஒரு வார காலத்துக்கு பல்வேறு பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வால்பாறை, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நேசம் டிரஸ்ட் உண்டு உறைவிடப் பள்ளியில் தினமணி நாளிதழ் சார்பில் யோகா நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற 50 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை முன்னிலையில் ஆசிரியர்கள் அடிப்படை ஆசனங்கள், முத்திரைப் பயிற்சி மற்றும் யோகா சார்ந்த உடற்பயிற்சிகள் அளித்தனர்.
யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்த பழங்குடியின மாணவ மாணவிகள் தினந்தோறும் இந்தப் பயிற்சிகளை செய்ய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் ஒரு வார காலத்துக்கு பல்வேறு பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வால்பாறை, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள நேசம் டிரஸ்ட் உண்டு உறைவிடப் பள்ளியில் தினமணி நாளிதழ் சார்பில் யோகா நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற 50 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை முன்னிலையில் ஆசிரியர்கள் அடிப்படை ஆசனங்கள், முத்திரைப் பயிற்சி மற்றும் யோகா சார்ந்த உடற்பயிற்சிகள் அளித்தனர்.
யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்த பழங்குடியின மாணவ மாணவிகள் தினந்தோறும் இந்தப் பயிற்சிகளை செய்ய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment