Sunday, 10 November 2019

அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்திற்கு மாறுதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவர் இன்று அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியேற்றதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இவர் இதற்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மாவட்டக்கல்வி அலுவலராகப் பணியாற்றி கடந்த ஜூன் மாதம் பதவியுயர்வு மூலம் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here