Sunday, 10 November 2019

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த  இரா.முருகன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு  இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு தினசரி, வார, மாதத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியதோடு நேர்மை அங்காடி என்ற திட்டத்தையும், அரசுப்பள்ளிகளில் துவக்கி வைத்து, பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.





மாறுதல் அளிக்கப்பட்டதையடுத்து புதிய இடத்தில் பணியேற்கும் பொருட்டு இவர் நேற்று காலை பணிவிடுவிப்பு பெற்று விடைபெற்றார். இதைனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பெ.அய்யண்ணன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியேற்றுக்கொண்டார்.இவருக்கு மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.இவர் இதற்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராகவும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகவும் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here