தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்து பட்டதாரிகளுக்கான கோரிக்கைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினார்கள். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பாடச்சுமை கருதி 8 பட்டதாரி ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
17 B ரத்து செய்திட கோரியும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஏழு பாடவேளைகள் ஒதுக்க வேண்டியும், 2008 க்குப் பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் பகுதி நேரத்தில் எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு கோவை தணிக்கை தடை விதித்ததை ரத்து செய்து தரக் கோரியும், 2004-2006 ஒப்பந்தப் பணி காலத்தினை பணிவரன்முறை செய்திடவும், ஆசிரியர்களுக்கு Quality based பணியிடை பயிற்சியை ( with experts) வழங்கிடவும் , தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் Smart Board வசதியை ஏற்படுத்தி தர வேண்டியும் , மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை பற்றியும் விரிவாக வலியுறுத்தினார். தமிழகத்தின் முதல் பள்ளிக் கல்வி ஆணையருக்கு தமிழகத்தை கல்வி தரத்தில் முதன்மை மாநிலமாக்க TNGTA வின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
17 B ரத்து செய்திட கோரியும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஏழு பாடவேளைகள் ஒதுக்க வேண்டியும், 2008 க்குப் பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் பகுதி நேரத்தில் எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு கோவை தணிக்கை தடை விதித்ததை ரத்து செய்து தரக் கோரியும், 2004-2006 ஒப்பந்தப் பணி காலத்தினை பணிவரன்முறை செய்திடவும், ஆசிரியர்களுக்கு Quality based பணியிடை பயிற்சியை ( with experts) வழங்கிடவும் , தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் Smart Board வசதியை ஏற்படுத்தி தர வேண்டியும் , மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை பற்றியும் விரிவாக வலியுறுத்தினார். தமிழகத்தின் முதல் பள்ளிக் கல்வி ஆணையருக்கு தமிழகத்தை கல்வி தரத்தில் முதன்மை மாநிலமாக்க TNGTA வின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment