Monday, 27 April 2020

அமிர்தா கல்லூரி மாணவர்களின் வீடு தேடி சென்று நிவாரண பொருட்கள்

அமிர்தா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களின் குடும்ப நலன் கருதி வீடுதேடி சென்று நிவாரண பொருட்களை கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி ஊராட்சியில் செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா நர்சிங் கல்லூரி, அமிர்தா தொழிற்பள்ளி, அமிர்தா கேட்டரிங் மேனேஜ்மெண்ட், அமிர்தா பேஷன் டிசைனிங் மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுப்புற கிராமங்களான செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, பாளையங்கோட்டை, எஸ்.பாறைப்பட்டி, மதுரை-வாடிப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.


கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 40 நாட்களாக மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் யாரும் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் மிகவும் சிரமப்பட்டனர். இதை உணர்ந்த அமிர்தா கல்லூரியின் தாளாளர் ஜி.ஆர்.சபரி தனது கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ மாணவியர்களின் வீடுகளுக்கு தேடி சென்று அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உட்பட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரி கூறுகையில் எங்கள் கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள்தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் சிரமப்படும் போது நாங்கள் அவர்களை எங்கள் குடும்பத்தினராக கருதி அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறோம். கடந்த 10 நாட்களாக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வருகிறோம் என்றார். அமிர்தா கல்லூரியின் தாளாளர் ஜி.ஆர்.சபரியின் இந்த மனித நேயத்தை பெற்றோர்கள் மனதார பாராட்டுகின்றனர்.

-மக்கள் குரல் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here