Tuesday, 28 April 2020

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் பிடித்தம்

கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதியில் திரட்டப்படும் நன்கொடை மூலம் கொரோனா நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகமாக கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் இதுவரை 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 308 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.



இந்நிலையில், கொரோனா நிவாரண பணிகளுக்காக, அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஒரே மாதத்தில் சம்பளத்தை முழுவதும் பிடிக்காமல், மாதம் 6 நாட்கள் வீதம், 5 மாதங்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய மாநில நிதித்துறை பரிந்துரைத்துள்ளது. இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பினராயி விரைவில் அறிவிக்க உள்ளார். பிடித்தம் செய்த சம்பளத்தை, சில மாதங்களுக்கு பின் ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here