திருப்பூரில் சிகரம்தொடு என்ற தனியார் அமைப்பு அரசுப் பள்ளிக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஓன்று சேர்ந்து தொடங்கி இருப்பதுதான் இந்த சிகரம் தொடு அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான்.
இதுவரை பல்வேறு இடங்களில் 7 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றை ஸ்மார்ட் வகுப்பறை கொண்ட பள்ளிகளாக மாற்றி இருக்கின்றனர் இந்த சிகரம் தொடு தன்னார்வ அமைப்பினர். இதனையடுத்து, 8-வது பள்ளியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளியாக வசதிகள் செய்து, கிராம மக்களுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த தொடக்கப் பள்ளியின் சுவர்களை அழகிய வண்ணங்களால் பெயிண்ட் அடித்து, பள்ளி கழிவறைகளுக்கு டைல்ஸ் பதித்து, அலங்கார வளைவுடன் நுழைவு வாயில், காம்பவுன்ட் சுவர்களில் பொன்மொழிகள், கணினி மற்றும் அகன்ற திரை வசதி, மாணவர்கள் அமர நாற்காலி, ஷூ ,சாக்ஸ், பிரேயர் கூட்டம் நடக்க ஆடியோ சிஸ்டம், சிசிடிவி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிவிக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகள் பல்வேறு வசதிகளை காட்டி கிராம்புற மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வரும் நிலையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அமைப்பாக ஒன்றிணைந்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
-Tamil News18
அரசுப் பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஓன்று சேர்ந்து தொடங்கி இருப்பதுதான் இந்த சிகரம் தொடு அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான்.
இதுவரை பல்வேறு இடங்களில் 7 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றை ஸ்மார்ட் வகுப்பறை கொண்ட பள்ளிகளாக மாற்றி இருக்கின்றனர் இந்த சிகரம் தொடு தன்னார்வ அமைப்பினர். இதனையடுத்து, 8-வது பள்ளியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பாலப்பன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளியாக வசதிகள் செய்து, கிராம மக்களுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த தொடக்கப் பள்ளியின் சுவர்களை அழகிய வண்ணங்களால் பெயிண்ட் அடித்து, பள்ளி கழிவறைகளுக்கு டைல்ஸ் பதித்து, அலங்கார வளைவுடன் நுழைவு வாயில், காம்பவுன்ட் சுவர்களில் பொன்மொழிகள், கணினி மற்றும் அகன்ற திரை வசதி, மாணவர்கள் அமர நாற்காலி, ஷூ ,சாக்ஸ், பிரேயர் கூட்டம் நடக்க ஆடியோ சிஸ்டம், சிசிடிவி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிவிக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகள் பல்வேறு வசதிகளை காட்டி கிராம்புற மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வரும் நிலையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அமைப்பாக ஒன்றிணைந்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
-Tamil News18
No comments:
Post a Comment