பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
12ம் வகுப்பு விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை ஒரு வார காலத்துக்குள் வெளியிட தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு மேற்கொள்ள 40 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 50 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-News 7
12ம் வகுப்பு விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை ஒரு வார காலத்துக்குள் வெளியிட தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு மேற்கொள்ள 40 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 50 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-News 7
No comments:
Post a Comment