Sunday, 12 July 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் போராட்டம்

தனியார் பள்ளிகளில் பணி புரியும்ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடித்து கையில் பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, 10 July 2020

டாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி இணையதளம்

வாட்ஸ்ஆப் பார்த்து ஏமாறாதீர்கள்!

வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் போட்டோக்களில் 8ல் ஒரு போட்டோ போலியானது மற்றும் தவறாக வழிநடத்துபவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போலி செய்திகள் பரவுவதில் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், சில அரசியல் கட்சி சார்பில் இயங்கும் வாட்ஸ்ஆப் குரூப்கள் போலி செய்திகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவை வெறுப்பையும், வன்முறையையும் எளிதில் தூண்டுகிறது. இது தொடர்பாக இரண்டு எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

2013ல் ஆசிரியர் தகுதித் தோ்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா?- பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27-ந்தேதி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:
பிளஸ் 2 இறுதித்தேர்வு  எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

ஆன்லைன் வகுப்பில்லை; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கப்படாது எனவும் தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் வகுப்பு; குழந்தைகள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள டாக்டர் தீபா தரும் எளிய பயிற்சிகள்!

கரோனா இன்னும் சிறிது காலத்துக்கு நம்முடனயே நடைபழகிப் பயணிக்கும் என்பதால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிப் பிள்ளைகளுக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படலாம் என பெற்றோர் தரப்பில் ஆட்சேபங்கள் எழுகின்றன. ஆனாலும் இதற்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

தினமும், ஐந்து மணி நேர, ஆன்லைன் வகுப்புகளால், கேந்திரீய வித்யாலயா பள்ளி மாணவர்களும், பெற்றோரும் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.
தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. தினமும் காலை, மாலையில், தலா, 45 நிமிடங்களுக்கு, இரண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?

வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில்  இன்று ஆலோசனை நடந்தது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில், இருந்து நடைபெற்ற ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, முதல்வரிடம் சமர்ப்பிப்பதற்காக இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

-Thanthi Tv

பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்னும் பின்னும் அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அப்போது ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அது தொடர்பாக ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான புதிய வழிகாட்டல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here