Sunday, 12 July 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் போராட்டம்

தனியார் பள்ளிகளில் பணி புரியும்ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடித்து கையில் பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணத்தினை வசூலிக்க தமிழக அரசு அனுமதியளிக்க கோரியும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அவிநாசியில்

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருந்தனர்.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தினர். அவிநாசியில், கொங்கு கல்வி நிலையத்தில், 45 ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.இதில், தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்வூதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2018--19ம் கல்வி ஆண்டுக்கான, கல்வி உரிமை சட்ட கல்வி கட்டண பாக்கி, 40 சதவீதம், 2019- --- 20ம் ஆண்டுக்கான பாக்கி, 100 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும்.தனியார் பள்ளிகளுக்கு, எவ்வித நிபந்தனை, நிர்ப்பந்தம் இல்லாமல் மூன்றாண்டு தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் தொடர் அங்கீகாரத்துடன் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here