Thursday, 11 March 2021

பரீட்சைக்கு பயமேன் போட்டியில் பங்குபெற பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் பரீட்சைக்கு பயமேன்-2021 என்னும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் மார்ச்-2021 மூன்றாவது வாரத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை இணையதள வழியில் சமர்ப்பிக்க அறிவுறுத்துமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

 கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.03.2021

எனவே ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் குறைந்தபட்சம் தலா ஒரு மாணவரையாவது இணையதளவழி போட்டியில் கலந்துகொள்ள செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here