தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படுவதால் முன்னெச்சரிகையாக மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதனை முறையாக பின்பற்றும் படி உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகரிக்கும் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து பள்ளிகளில் பணிபுரியும் மற்ற பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது.
மற்ற பள்ளிகளை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மூன்றாம் அலை கொரோனா தொற்று தொடங்கி விட்டதோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment