வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் பள்ளி பயிற்சி பற்றியும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டு, பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு என்னென்ன குறைகள் இருக்கிறது என கேட்டறிந்தார்.
அதன் பின்னர் தலைமை ஆசிரியர் புதியதாக ஆய்வகங்கள் வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment