கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த என்.கீதா, கரூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாறுதலில் செல்லும் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.இதையடுத்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் சார்பில் பிரிவு உபச்சாரம் வழங்கப்பட்டது.
இதில், அமைப்பின் மாநில தணிக்கையாளர் அருளானந்தம், மாவட்ட தலைவர் சரவணக்குமார், ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதன்மைக்கல்வி அலுவலர் என்.கீதா அவர்கள் மாணவர்களின் நலன், கல்வி நலன் ஆகியவற்றுக்காக செய்த சேவைகள் நினைவு கூறப்பட்டன.
No comments:
Post a Comment