Monday, 26 June 2017

ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.இப்பிரச்சாரத்தை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ராஜமாணிக்கம் தலைமையேற்று துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் முரளி மற்றும் வண்ணத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒன்றியம் வாரியாக ஆசிரியர்கள் தீவிர விழிப்புணர்வு பிரசாரம்

அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, ஒன்றியம் வாரியாக ஆசிரியர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 2017-18ம் கல்வியாண்டு நாளை துவங்குகிறது. இதையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 1,114 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.

Sunday, 18 June 2017

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!

எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல்
நன்னம்பிக்கை முனையாக நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார். உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.

Saturday, 10 June 2017

HOW TO CREATE A WIKIPEDIA ARTICLE IN TAMIL

தமிழ் விக்கிப்பீடியா பாடம் 1 - புதுக் கட்டுரை எழுதுவது எப்படி?

தமிழக அரசுபள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக நிகழ் கல்வியாண்டிலே கொண்டுவர ஆசிரியர் சங்களுக்கு கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

அரசுப்பள்ளி,மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத்தரம்,
கல்வித் தரத்தை உயர்த்தும் 6அம்ச  கோரிக்கை:

1.) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).

2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வரை) கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஆதாரை இணைக்க புதிய 'ஆப்'

மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில்,
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது.

இதில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 'ஸ்டெம்செல்' மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1,016 வகை நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, 216 வகையான, சமீபத்திய மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here