ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.இப்பிரச்சாரத்தை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ராஜமாணிக்கம் தலைமையேற்று துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் முரளி மற்றும் வண்ணத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் சி.ரகுராமன் அனைவரையும் வரவேற்றார்.ஆசிரியர் பயிற்றுனர்கள் பேசும்போது அரசுப்பள்ளிகளில் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அரசுப்பள்ளிகளில் இனிமையான கற்றல் கற்பித்தல் சூழல் ஆகிய தலைப்புகளில் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களான பாட நூல்கள், காலணிகள் பேருந்து பயண அட்டை, குறிப்பேடுகள், வண்ணப் பென்சில், பெண்கல்விக்கான ஊக்கத்தொகை, புத்தகப்பை, இலவச சீருடைகள், நில வரைபட நூல், கணித உபகரணப்பெட்டி, மற்றும் ஆரோக்கியமான மதிய உணவு, மருத்துவ முகாம் ஆகிய வசதிகள் பற்றி ஆசிரியர் பயிற்றுனர் ராஜமாணிக்கம் மற்றும் முரளி ஆகியோர் விளக்கமாக கூறியதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு சென்றனர்.ரிஷிவந்தியம், வெங்கலம், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, முனிவாழை, பாசார், கீழ்ப்பாடி, பாவந்தூர், சாத்தப்புத்தூர், உள்ளிட்ட பல ஊர்களில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதற்கு ஆவலுடன் முனைப்பு காட்டினார்கள்.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் சி.ரகுராமன் அனைவரையும் வரவேற்றார்.ஆசிரியர் பயிற்றுனர்கள் பேசும்போது அரசுப்பள்ளிகளில் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அரசுப்பள்ளிகளில் இனிமையான கற்றல் கற்பித்தல் சூழல் ஆகிய தலைப்புகளில் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களான பாட நூல்கள், காலணிகள் பேருந்து பயண அட்டை, குறிப்பேடுகள், வண்ணப் பென்சில், பெண்கல்விக்கான ஊக்கத்தொகை, புத்தகப்பை, இலவச சீருடைகள், நில வரைபட நூல், கணித உபகரணப்பெட்டி, மற்றும் ஆரோக்கியமான மதிய உணவு, மருத்துவ முகாம் ஆகிய வசதிகள் பற்றி ஆசிரியர் பயிற்றுனர் ராஜமாணிக்கம் மற்றும் முரளி ஆகியோர் விளக்கமாக கூறியதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு சென்றனர்.ரிஷிவந்தியம், வெங்கலம், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, முனிவாழை, பாசார், கீழ்ப்பாடி, பாவந்தூர், சாத்தப்புத்தூர், உள்ளிட்ட பல ஊர்களில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதற்கு ஆவலுடன் முனைப்பு காட்டினார்கள்.
No comments:
Post a Comment