Monday, 26 June 2017

கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒன்றியம் வாரியாக ஆசிரியர்கள் தீவிர விழிப்புணர்வு பிரசாரம்

அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, ஒன்றியம் வாரியாக ஆசிரியர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 2017-18ம் கல்வியாண்டு நாளை துவங்குகிறது. இதையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 1,114 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.


மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் அந்த கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சிசிஎம்ஏ பள்ளி சார்பில் நடந்த பேரணியை முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி, மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை மற்றும் இதர உபகரணங்கள் விநியோகம், கல்வி கற்பித்தல் முறை, மாணவர் சதவீதம், பள்ளி கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் அந்தந்த ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here